ICC ஸ்ரீலங்கா கிரிக்கட் மீது விதித்துள்ள தடையினால் இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் நஷ்டம் ஏற்படும் என SLC தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளின் இடமாற்றம், 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த ICCயின் வருடாந்த மாநாட்டை இழந்ததாலும் இந்த நஷ்டம் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் தற்போது இடம்பெற்று வரும் விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.
ICC தடைக்கு மத்தியில் இலங்கை அணி இருதரப்பு கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்ற முடியும்.
ஆனால் சர்வதேச கிரிக்கட் போட்டிகளை இலங்கையில் நடத்த முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.