முட்டை விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 60 லட்சம் முட்டைகளை இன்று (12) முதல் சந்தைக்கு வெளியிடவுள்ளதாக வர்த்தக, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இன்று (12) தெரிவித்தார்.சதோசிடம் இருந்து ஒரு முட்டையைத் தலா 35 ரூபாவிற்குக் கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
ஜாஎல நகரசபை மைதானத்தில் நாளை ஆரம்பமாகவுள்ள மஹாபொல கண்காட்சியின் நடவடிக்கைகளை அவதானிக்க வந்த அமைச்சர் இன்று (12) பிற்பகல் ஊடகங்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்