நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு 80,00,222 டெங்கு நோயாளர்கள் மற்றும் 47 இறப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தில் 46.4 வீதமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கொழும்பு மாவட்டத்தில் 16,948 நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 15,419 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 4,849 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
எனவே, 61 சுகாதார மற்றும் மருத்துவப் பிரிவுகள் டெங்கு அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டன.