அகுனுகொலபலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து அகுனுகொலபலஸ்ஸ வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்று தனமல்வில சர்வோதய பிரதேசத்தில் உள்ள வாடி ஒன்றில் பதுங்கியிருந்த கைதிகள் இருவரை தனமல்வில பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 30 மற்றும் 32 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை கைக்குண்டுகளை வைத்திருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.