உயிர்த்தியாகம் செய்த மகளிர் இராணுவத்தினருக்காக நினைவுத் தூபி பொரளையில் திறந்துவைப்பு

0
11

நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த மகளிர் இராணுவத்தினருக்காக புதிய நினைவுத் தூபி பொரளையில் (10.11.2023) அன்று திறந்துவைக்கப்பட்டது.
பொரளையில் அமைந்துள்ள மகளிர் படையணி நிலையத்தில் இந்த நினைவுத்தூபி திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பிரதம அதிதியாக கலந்துகொண்டு தூபியை திறந்துவைத்தார்.
நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த 25 வீராங்கனைகளை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிர்த்தியாகம் செய்தேரின் உறவினர்கள் நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here