குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதன் பணியாளர்கள் திடீர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
குடிரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மேலதிக கட்டுப்பாட்டாளர் நாயகத்தை நீக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் காரணமாக கடவுச் சீட்டு பெறுகை உள்ளிட்ட சேவைகளுக்காக வந்திருந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.