கிரேட்டர் கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி வரைவு கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று கையளிக்கப்பட்டது.

இது தொடர்பான அபிவிருத்தி செயற்பாடுகளை துரிதப்படுத்துவது தொடர்பில் JICA உடன் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.2023 பெப்ரவரி மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி நகரை நன்கு திட்டமிடப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட்ட நகரமாக மாற்றுவதற்கான பிரேரணை அமைச்சர்கள் சபையினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here