அமெரிக்காவின் எந்தப் பகுதியிலும் சென்று தாக்கக் கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளதாக ஜப்பான் கூறியுள்ளது.
தலைநகர் பியாங்யாங்கிற்கு அருகில் இருந்து 1,000 கி.மீ தூரம் பயணித்த இந்த ஏவுகணை ஒரு நாளில் வடகொரியாவின் இரண்டாவது சோதனை என்று தென் கொரியா கூறுகிறது.73 நிமிடங்கள் பறந்த இந்த ஏவுகணை ஜப்பானின் ஹொக்கைடோவுக்கு மேற்கே கடலில் விழுந்ததாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு சில மணி நேரங்களுக்கு முன் வடகொரியா குறுகிய தூர ஏவுகணையை பரிசோதித்தது அது 570 கிமீ தொலைவில் உள்ள கடலை குறிவைத்து தாக்கியதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன