இளம் ஆராய்ச்சியாளர் போட்டியில் வெற்றி!

0
4

மட் / பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடி மாணவர்கள் இளம் ஆராய்ச்சியாளர் போட்டியில் பங்குபற்றி தேசிய ரீதியில் வெற்றி பெற்றதுடன் கல்வி அமைச்சினால் முதல் தடவையாக நடாத்தப்பட்ட ஆராய்ச்சியாளர் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு NextGen Insights நாளிதழில் பட்டிருப்பு தேசிய பாடசாலையின் பெயரைப் பொறித்த மாணவர்களான ம.தசாப்தன், தி.சேம், சு. சுமித்ரா, த.வேதுஜா, கோ.சஸ்மிகா, அ.சஜித், ர.கேனுசாந், வ.பத்மலோஜனி, ச.திருத்திகா, சி.தரண்யா மற்றும் வழிகாட்டிய பாடசாலை ஆசிரியர்களான செல்வராஜா தேவகுமார், தங்கராசா யுதர்சன் ஆகிய அனைவருக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதில் தெரிவு செய்யப்பட்ட பதினைந்து பாடசாலைகளில் தமிழ்மொழியில் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு பாடசாலை பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடி என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here