வளர்ப்பு நாயைக் காப்பாற்ற தன் உயிரை விட்ட பெண்

0
5

வெல்லவ ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலை நோக்கி பாய முற்பட்ட தனது வளர்ப்பு நாயைக் காப்பாற்றச் சென்ற பெண் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (05) காலை ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய பெண்ணாவார்.

இவர் தனது வளர்ப்பு நாயுடன் வீடு ஒன்றுக்குச் சென்றிருந்த நிலையில் அவ்வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் தனது வீட்டுக்கு புறப்பட்ட போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

விசாரணையில், இவர் தனது வளர்ப்பு நாய் ரயிலை நோக்கி பாய முற்பட்ட போது அதைக் காப்பாற்ற சென்று ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர் எங்கு சென்றாலும் தனது வளர்ப்பு நாயை தினமும் அழைத்து செல்வதாக பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here