மரதன் ஓடிய மாணவனுக்கு நேர்ந்த கதி!

0
3

அக்கரைப்பற்று பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டு போட்டிகள் இடம்பெற்று வந்தது. இதன் போது மாணவர்களுக்கான மரதன் போட்டியானது நடத்தப்பட்ட நிலையில் இதில் பங்குபற்றிய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 16 வயது நிரம்பிய மாணவர் ஒருவரே திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சில மணி நேரத்திற்க்கு பின்னர் குறிப்பிட்ட மாணவன் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திருக்கோவில் வைத்தியசாலையின் அசமந்த போக்கு காரணமாகவே இம்மாணவன் உயிரிழந்தார் என பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் திருக்கோவில் – பொத்துவில் பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here