செவிப்புலனற்றோருக்கான உலகக் கிண்ண போட்டி!

0
4

செவிப்புலனற்றோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள இலங்கை செவிப்புலனற்ற அணி, இந்திய செவிப்புலனற்ற அணியை இன்றைய தினம் இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு எதிர்த்தாடவுள்ளது. செவிப்புலனற்ற சர்வதேச கிரிக்கெட் சபை (Deaf International Cricket Council – DICC) ஏற்பாடு செய்துள்ள செவிப்புலனற்றோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் கடந்த 5ஆம் திகதியன்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் ஆரம்பமானது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்று வருகின்றன.

லீக் சுற்றில் இந்திய அணியுடனான போட்டியில் இலங்கை அணி அடைந்த தோல்விக்கு, இன்று நடைபெறுகின்ற அரையிறுதிப் போட்டிக்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி முன்னேறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here