திபெத்தில் நிலநடுக்கம் !

0
18

திபெத்தில் உள்ள சிசாங் பகுதியில் நேற்று (ஜனவரி 7, 2024) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆகப் பதிவாகியுள்ளதாகப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்று மாலை 7.38 மணிக்கு ஏற்பட்டுள்ளது. தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாகப் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here