சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை இலங்கைக்கான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் முதல் மீளாய்வை பரிசீலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இரண்டாவது தவணையின் இறுதி தீர்மானம் இன்று (12.12.2023) மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் பின்னரே சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையை பெற்றுக்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
IMF கடனின் இரண்டாவது தவணையான $300 மில்லியனுக்கு இன்று ஒப்புதல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் VATக்கான திருத்தங்கள் நேற்றைதினம் நாடாளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஆண்டு இலங்கை தனது அந்நிய செலாவணி கையிருப்பில் வரலாறு காணாத வீழ்ச்சியின் பின்னர் மிக மோசமான நிதி நெருக்கடியில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.