ஒரு டன்னுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை அழிப்பதற்கு திட்டம்

0
6

ஒரு டன்னுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை அழிப்பதற்கு இலங்கை காவல்துறை திட்டமிட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டிற்கு பின்னர் பொலிஸ் மற்றும் ஏனைய சட்ட அமுலாக்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சோதனைகளில் நாட்டில் கைப்பற்றப்பட்டவை ஆகும்.
குறித்த காலக்கட்டத்தில் கைப்பற்றப்பட்ட மற்றுமோர் கணிசமான அளவு ஹெரோயின் கையிருப்பு தற்போது அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அது சம்பந்தமான நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் கதி குறித்து பொதுமக்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பதில் பொலிஸ்மா அதிபர் இந்த விடயத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here