2024 ஜனவரி நடுப்பகுதியில் மீண்டும் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நீர் மின்சாரத்தில் இருந்து போதிய அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மக்களுக்கு மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அடுத்த மின் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் தான் முன்மொழியப்பட்டிருந்தது. இந்த கணிப்புகள் மாறிவிட்டதால் இதன் நன்மையை நுகர்வோருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.