இலங்கை வரலாற்றில் இந்த வருடத்தில் அதிக யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 2023 ஜனவரி 1 முதல் டிசம்பர் 1 ஆம் திகதி வரை 449 யானைகள் உயிரிழந்துள்ளன.
பொலன்னறுவை வனவிலங்கு வலயத்தில் 96 யானைகளும், கிழக்கு வனவிலங்கு வலயத்தில் 86 யானைகளும், அனுராதபுரம் வனவிலங்கு வலயத்தில் 82 யானைகளும் உயிரிழந்துள்ளன.
துப்பாக்கி சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகி 81 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.