இளைஞர்களை விவசாயத்திற்கு ஈர்க்கும் வேலைத்திட்டங்களுக்காக 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தில் ஆர்வமுள்ள 1000 இளைஞர்களை தெரிவு செய்து அவர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்கி ஏற்றுமதி செய்யும் பயிர்களுக்கு வழிகாட்ட விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அடுத்த வருடம் நான்கு பிரதான பயிர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் அதில் நெல், சோளம், மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்டவை உள்ளடங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.