மின்னல் தாக்கியதில் மாணவன் பலி.

0
6

அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் மின்னல் தாக்கியதில் மாணவன் ஒருவர் அதிர்ச்சியடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மின்னல் தாக்கிய போது 15 வயதுடைய குறித்த மாணவன் தனது வீட்டின் தாழ்வாரத்தில் நின்று கொண்டிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்னல் தாக்கம் காரணமாக மாணவன் நிலைதடுமாறி கீழே விழுந்து உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வைத்தியசாலையில் மின்னல் தாக்கத்தினால் மாணவனின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை என வைத்தியர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

உயிரிழந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஹொரண வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here