தொடரும் சீரற்ற கால நிலையால் பதுளை, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, குருணாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
அவற்றுள் பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மூன்றாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.