2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த பரீட்சை 2024 ஜனவரி 04 முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறும்.
2024 உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உச்ச நீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இது தொடர்பான மற்றொரு மனு மனுதாரர்களால் வாபஸ் பெறப்பட்டது.
இந் நிலையிலேயே கல்வி அமைச்சின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.