வவுனியா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து சில மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பாடசாலையின் குப்பை தொட்டியை துப்பரவு செய்த போது, வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து, விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் குறித்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகளை வவுனியா நீதிமன்ற அனுமதியுடன் அழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.