லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) புதிய தலைவராக நீதியரசர் டபிள்யூ. எம்.என்.பி இட்டவல நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஏனைய உறுப்பினர்களாக சேத்திய குணசேகர மற்றும் கே.பேர்னாட் ராஜபக்ஷ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட பொருத்தமான நியமனங்கள் 2024 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.