கால அவகாசம் நாளையுடன் நிறைவு

0
7

உயர்தரப் பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் இவ்வருட புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, தீவின் அனைத்து கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய வகையில் ஒரு பிராந்தியத்தில் இருந்து 50 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு 5000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசத்தை நீடிக்க எதிர்பார்க்காத காரணத்தினால் தகுதியுடைய மாணவர்கள் நாளை மறுதினம் முன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி நிதியம் தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here