மின்சாரச் சபையின் தொழிற்சங்க தலைவர்கள் குழுவிற்கு எதிராகக் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ரஞ்சன் ஜயலால் உள்ளிட்டோர் இன்று ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு வளாகம் மற்றும் மத்திய வங்கி வளாகங்களுக்குள் பிரவேசிப்பதை தவிர்க்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும் அரச சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்காத வகையிலும் போராட்டத்தில் ஈடுபடுமாறு நீதவான் திலின கமகே, பேராட்டத்தில் ஈடுபடுவோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை மின்சாரச் சபை மறுசீரமைப்புச் சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கடந்த புதன் கிழமை மூன்று நாள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here