ஜனாதிபதி 2025ஆம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்தவர்கள் இருக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். இதனை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பிரச்சினைக்குத் தீர்வுகாண அவசர வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.