மக்கள் மத்தியில் தற்போது இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ்களின் தாக்கம் அதிகரித்து வருவதாகச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அத்துடன், காய்ச்சல், இருமல், தொண்டைப்புண், சளி, உடல்வலி, தலைவலி மற்றும் உடல்சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இன்புளுவென்சா வைரஸானது ஏப்ரல் மாதம் தொடக்கம் ஜூலை மாதம் வரையில் அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் படி இன்புளுவென்சா வைரஸானது 25% பதிவுசெய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here