இன்று தொழுநோய் தினம்!

0
3

இலங்கையில் தொழுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் , தற்போது அதிகளலான மக்கள் மத்தியில் தொழுநோய் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமை உலகத் தொழுநோய் தினமாக அனுசரிக்கப்படுகின்றது. மேலும் தொழுநோயை தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த வருடம் தொழுநோயாளர் தினம் அனுசரிக்கப்படுகின்றது.இதேவேளை, இலங்கையில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
மேலும், சிறுவர்களிடையே பரவும் தொழுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here