சிலாபம் ஆராச்சிக்கட்டுவ பங்கதெனிய வெஹரக்கல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 21 வயதுடைய ஹசித் சந்தருவன் பெரேரா என்ற இளைஞனே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் காலை 7.30 மணியளவில் ஹசித் சந்தருவன் பெரேராவின் சகோதரன் அறைக்கு சென்று பார்த்த போது அவர் எழுந்திருக்கவில்லை எனவும் பதிலளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.அவர் கையடக்க தொலைபேசியில் பொருத்திய ஹியர் போன்களை காதில் அணிந்த நிலையில் உறங்கிய நிலையில் இருந்துள்ளார்.
அதன் பின்னர் அயலவர்களின் உதவியுடன் குறித்த இளைஞனை சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அதற்குள் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் .