நேற்றிரவு கட்டு துவக்கு வெடித்ததில் சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாக வரகாபொல – அல்கம பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
15 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார் . அவர் சிகிச்சைகளுக்காக வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வரகாபொல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.