அரச மற்றும் அரச அனுசரணைப் பெற்ற தனியார் பாடசாலைகளின் விடுமுறை குறித்து கல்வி அமைச்சு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் நாளை 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.
அதன்பின்னர் விடுமுறை வழங்கப்பட்டு, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி மாதம் 1ம் திகதி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.