பஸ்களில் புதிய தொழிநுட்ப கருவி

0
21

புதிய தொழிநுட்ப கருவியொன்றை பஸ்களில் பொருத்தவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் தடுக்கும் நோக்கில் இந்த கருவிகள் பொருத்தப்படவுள்ளன.
பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள வாக்கி-டாக்கி ரக கருவி மூலம் முறைகேடு தொடர்பாக உரிய நேரத்தில் அறிவிக்க முடியும்.

தெரிவிக்கப்படும் முறைப்பாடு பஸ்ஸின் உரிமையாளர், பயணிகள் போக்குவரத்து ஆணையம் மற்றும் அருகில் உள்ள பொலிஸ் நிலையம் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தெரிவிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here