எரிபொருள் விலையை குறைக்க முடியும் – பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் முகமட் தெரிவிப்பு

0
7

உள்நாட்டில் எரிபொருள் விலையை 15முதல் 25 சதவீதத்தினால் குறைக்க முடியும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எனினும் அதற்கு சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மேலும் தரமுயர்த்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் முகமட் தெரிவித்துள்ளார்.

1965ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திரிகப்பு நிலையம், சிறுசிறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் பாரிய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

அவ்வாறான திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுமாக இருந்தால், அதன் ஊடாக பாரியளவில் எரிபொருள் விலையை குறைக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here