வாகனங்களின் பதிவு மோசடி தொடர்பில் விசாரணைகள்

0
6

வாகனங்களின் பதிவு மோசடி தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் சுங்க திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த தகவலை குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

பொலிஸ் மா அதிபரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசேனவிடம் இது தொடர்பான அறிக்கையினை சமர்ப்பித்தது.

போலி ஆவணங்களை தயாரித்து மோசடியான முறையில் சுமார் 200 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து பல திணைக்களங்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here