ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால குழுவை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து குறித்த குழுவை கலைப்பதற்கான நடவடிக்கை குறித்து விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ புதன்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
குறித்த இடைக்கால குழுவிற்கு எதிராக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த மனு இன்று காலை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த விடயம் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது குறித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவு டிசம்பர் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளது.