பாடசாலை விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு!

0
2

எதிர்வரும் சித்திரை புத்தாண்டு விடுமுறையின் பின்னர்ப் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாகக் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நிலவும் வறட்சி காரணமாகத் தோல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் அதிகரித்துள்ள நிலையில் அதிக வெளிப்புற செயற்பாடுகளால் மாணவர்கள் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும்.

வெளிப்புற செயற்பாடுகளைக் குறைத்துக்கொள்ளுமாறு வைத்தியர்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாக அறிவுறுத்தல் வழங்கி வருகின்றனர். இந்தநிலையில் இந்தச் சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாகக் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here