கிண்ணத்தை வென்றது RCB அணி!

0
3

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது. டெல்லியில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இந்தநிலையில் 114 எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

இதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் கிண்ணத்தை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here