ஹங்வெல்ல, தும்மோதர சந்திக்கு ஆருகில் நபரொருவர் இன்று காலை வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஆடை தொழிற்சாலையின் பஸ் சாரதி ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் ஆவார்.
இங்கிரிய பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையே (வயது 35) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் தப்பிச் செல்ல முயன்ற போது மெகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, ஹங்வெல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.