பல்கலைக்கழகக் கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். சம்பள பிரச்சினையைச் சுட்டிக்காட்டி இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகிறது.
தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி பல்கலைக்கழகக் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அண்மைக்காலமாகப் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.