இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களில் பயணிப்பவர்களுக்கு அல்லது யாரேனும் நபருக்கு அநீதி இழைக்கப்படுமாயின் 365 நாட்களும் எந்த ஒரு நேரத்திலும் 1958 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பை ஏற்படுத்தித் தகவல் வழங்குமாறு அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (27.02. 2024) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது செய்தியாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.