அதிகரித்து செல்லும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை

0
6

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 12 ஆயிரத்தினால் அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் 72,903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த வருடத்தில் இதுவரையில் 85,636 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டில் இதுவரை 50 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 11 மாத குழந்தையொன்று நேற்று உயிரிழந்தது.

இந்த மாதத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் வேகமாக அதிகரித்துள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 945 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த வருடம் உலகளவில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here