நாட்டில் தெங்கு அறுவடை குறைந்துள்ளதாக இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார்.
அவர் 400 மில்லியனுக்கும் அதிகமான தெங்கு அறுவடை குறைந்துள்ளது என்றார்.
கடந்த ஆண்டு தெங்கு அறுவடை 3,350 மில்லியன் காய்களாக இருந்தது.
அது, இந்த ஆண்டு 2,950 மில்லியன் தேங்காய்களாக குறைந்துள்ளது.
சுமார் 2 வருடங்களாக உரமிடப்படாமையே இதற்கு பிரதான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.