ஜனவரியில் சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் சீன அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை வரும் புதிய சீன கப்பல் 2024 ஜனவரி 5 முதல் மே மாதம் வரை தென் இந்தியப் பெருங்கடலில் ஆய்வுகளை முன்னெடுக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் இலங்கை மற்றும் மாலைதீவு துறைமுகங்களில் சீனக்கப்பல் நங்கூரமிடப்பட உள்ளது.
அதற்காக இலங்கை அரசாங்கத்திடமும் மாலைதீவு அரசாங்கத்திடமும் சீன அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.