அனைத்துத் தரங்களுக்கும் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என நாடாளுமன்றில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுசரணையாளர்களின் ஆதரவுடன் கல்விக் கட்டமைப்பை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விசேட தேவையுடைய பிள்ளைகளை சாதாரண பிள்ளைகள் கல்வி கற்கும் வகுப்பறைகளில் இணைத்துக்கொள்ளக் கூடிய வகையில் INCLUSIVE EDUCATION முறையை அறிமுகப்படுத்தவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.