களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையை அண்மித்துள்ள தாழ்வான பகுதிகளுக்கு சிறு வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடா கங்கையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த 24 மணித்தியாலங்களில் புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவரவைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ஆற்றுப் படிக்கையினை அண்மித்து, தாழ் நிலங்களில் வாழும் மக்களையும் அவதானமாக இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
இதனால், மக்களும் போக்குவரத்து சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் நிலைமையை கையாளுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here