அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் மின்சார கட்டணத்தில் குறைப்பு ஏற்படும்

0
6

இலங்கையில் அடுத்ததாக ஆட்சிக்கு வரும் ஜனாதிபதி அனைவரின் ஆதரவையும் பெறக்கூடியவராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த வருடம் நடைபெறும் எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் மின்சார கட்டணத்தில் குறைப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் திரு.ரணதுங்க தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டச் செயலகத்தில் இன்று (06) நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here