இணையவழி பாதுகாப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிதம் ஒன்றின் ஊடாகக் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் இணையவழி பாதுகாப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலம் தற்போது நிறைவேற்றப்படுமாயின், அதனூடாக ஸ்தாபிக்கப்படவுள்ள உத்தேச ஆணைக்குழு மற்றும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு வரம்பற்ற அதிகாரம் கிடைக்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறை சட்டமூலமொன்றை மீள சமர்பிப்பதற்குத் தேவையான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்
ஆகையினால், இந்த விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறித்த கடிதம் ஊடாகச் சபாநாயகரிடம் கோரியுள்ளார்.