தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது வாக்குமூலத்தை பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக்க சந்ரகுப்த தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் கைது செய்யப்பட்டிலுருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையிலேயே தற்போது தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சரிடம் விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.