இந்தியாவின் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலங்கையில் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்காக பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏழுமலையான் கோவில்கள் நிரமாணிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், இலங்கையிலும் ஏழுமலையான் கோவில் நிர்மாணிக்கப்பட வேண்டும் என இலங்கை பக்தர்கள் விடுத்த கோரிக்கையின்படி இந்திய அரசு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் எதிர்வரும் 29ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.