செவித்திறன் குறைபாடுள்ள 4 இலட்சம் பேர் அடுத்த ஆண்டுச் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாரதி அனுமதி பத்திரம் பெற்ற விசேட தேவையுடையோரினால் விபத்துகள் ஏதுவும் ஏற்படவில்லை எனவும்
இது மிகவும் வெற்றிகரமான திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் கூறினார்.
நிபந்தனைகளுடன் செவித் திறன் குறைபாடுள்ளோருக்கு சாரதி அனுமதி பத்திர விநியோகம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.